Thursday, June 15, 2006

நண்பர் வசந்தன் அவர்களுக்கு........

//விவிலியத்தில் எங்குமே நீங்கள் சொன்னவாறு சொல்லப்படவில்லை. இயேசு உயிர்நீத்தது, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது, உயிர்த்தெழுந்தது என்றவாறு தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் பைபிள் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு இன்னும் சந்தேகம் தான்.//

விடமாட்டீர்கள் போல் உள்ளது.

நான் இக்கேள்வியை வைத்தது தருமி சாருக்காக. தான் மதம் மாறியதற்கான காரணமாக "இயேசுவின் சிலுவை மரணத்தைக்" குறிப்பிட்டதை நான் அவ்வாறு பைபிளில் இல்லையே என்று மறுத்தேன். மட்டுமல்ல இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக உள்ளதே என்றும் கேள்வியை வைத்தேன்.

கிறிஸ்த்தவர்களின் மத அடிப்படையையே தகர்க்கும் இக்கேள்வியை தருமி அவர்கள் திரும்பி கூட பார்க்கவில்லை.

இதே விஷயத்தை நான் நண்பர் இராகவன் பதிவில் அவருடைய ஒரு கேள்விக்கு பதிலாக வைத்திருந்தேன். அதை இது வரை யாரும் சீண்டி கூட பார்க்கவில்லை.

எல்லோருக்கும் பயம். என்னிடம் அப்படி எங்கே இருக்கிறது எனக் கேட்டு நான் எடுத்துக் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். முக்கியமாக இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் ஒரு கிறிஸ்த்தவருக்கு கூட "பைபிளில் அப்படி ஒரு வார்த்தையே இல்லை" என்று உறுதியாக கூற தைரியம் வராதது தான்.

பைபிளை முழுமையாக படித்திருந்தால் அல்லவா இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும் பொழுது இவர்களால் பதிலளிக்க முடியும்.

எது எப்படி இருந்தாலும் இது வரை யாருமே கூறாத நான் எதிர்பார்த்த பதிலோடு நண்பர் வசந்தன் அவர்கள் வந்துள்ளார்கள்.

பரவாயில்லை. தருமி அவர்களை இக்கேள்வியை வைத்து அவர் "மதம் மாறியதை" கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். அவரிடம் தான் இதற்கான பதிலை கூற வேண்டுமா என்ன?

வசந்தன் அவர்களே உங்களிடம் இதற்கான பதிலை, அதாவது "இயேசுவை கர்த்தர் சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றினார்" என்பதற்கு ஆதாரம் நிச்சயமாக பைபிளிலிருந்து என்னால் கொடுக்க முடியும். அதற்கு முன் உங்கள் பதிலிலிருந்து சில சந்தேகங்கள் கேள்விகள் எழுந்துள்ளன. அதனை நீங்கள் எனக்கு தெளிவு படுத்த முடியுமா?

//நீங்கள் பைபிள் என்று எதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு இன்னும் சந்தேகம் தான்.// என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.

நான் நினைத்துக் கொண்டிருப்பது புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும் அடங்கிய கிறிஸ்தவர்கள் வேத நூலாக கருதுவதைத் தான் பைபிள் என நினைக்கிறேன்.(தேவையெனில் என்னிடம் இருக்கும் பைபிளின் அச்சக பதிப்பு விவரங்களை தருகிறேன்.)

இனி நீங்கள் எதை பைபிள் என்று கருதுகிறீர்கள் என்பதை கூற முடியுமா? ஏனெனில் நான் ஆதாரத்தை எடுத்து தரும் போது இது பைபிள் அல்ல என்று கூறி விடக் கூடாது அல்லவா?

//நீங்கள் சொல்வது போல் பவுல் அவர்களால் செருகப்பட்டிப்பதாக சொல்வதும் புரியவில்லை. பவுலின் திருமுகங்கள் எவையும் இயேசுவின் வாழ்க்கைக் காலத்தைச் சொல்வதில்லை.//

இல்லை தான். ஆனால் இயேசு பின்பற்றிய கர்த்தரின் சட்டதிட்டங்களை மாற்றி இன்றைய கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு அடிகோலியவர் பவுல் என்கிறேன். இதற்கு என்னால் பவுலின் நிரூபங்களிலிருந்தும்(புறஜாதியருக்கு எழுதிய கடிதங்களிலிருந்து)அதற்கு எதிரான கொள்கைகளை பைபிளிலிருந்தும் என்னால் எடுத்து காண்பிக்க இயலும்.

//இயேசுவின் வாழ்க்கையை எழுதியவர்கள் நால்வர் மட்டுமே.//

அது இன்று நிலுவையில் இருக்கும் புதிய ஏற்பாட்டின் படி. ஆனால் இயேசுவின் வாழ்க்கையை எழுதியவர்கள் உண்மையில் நால்வர் தானா? யோசித்துப் பாருங்கள்.

//இயேசுவை என்று நீங்கள்தான் அடைப்புக்குறிக்குள் போட்டுள்ளீர்கள். அடைப்புக்குறிக்குள் சொல்வது குர்-ஆனுக்கு விளக்கம் கொடுக்கும் முறை.//

நான் பைபிளில் வரும் வசனத்திலிருந்து ஒரு பகுதியை தான் எடுத்து வைத்தேன். அது அதற்கு முந்தைய வசனத்தின் படி புரிய வேண்டுமென்பதற்காகத் தான் இயேசுவை அடைப்புக் குறியில் இட்டேன். முழுவசனத்தையும் காண்பிக்கும் பொழுது இதற்கான தேவையிருக்காது. குரானுக்கு விளக்கம் கொடுக்கும் முறையை பற்றி தேவையெனில் மற்றொரு பதில் பார்ப்போம். இது அதற்கான இடம் இல்லை.

//விவிலியத்தில் கர்த்தர் என்பது இயேசுவைத்தான் குறிக்கிறது.//


உங்கள் பதிலிலிருந்து என்னுடைய முக்கியமான கேள்வியே இதனைக் குறித்து தான்.

நான் "இயேசுவை கர்த்தர் சிலுவையிலிருந்து காப்பாற்றினார்" என்கிறேன். அதுவும் பைபிளில் வருகிறது என்கிறேன்.

நீங்கள் இயேசு தான் கர்த்தர் என்கிறீர்கள். நீங்கள் கூறுவது உண்மையெனில் நான் கூறும் விஷயமே அடிபட்டு போகும். நீங்களும் பைபிளில் வரும் கர்த்தர் என்ற வார்த்தை இயேசுவை குறிப்பதாக கூறியிருக்கிறீர்கள்.

இதற்கு ஆதாரத்தை அதாவது "இயேசு தான் கர்த்தர்" என்பதாக பைபிளில் எங்கு வருகிறது என்று சற்று காண்பியுங்களேன்.

இயேசு அவ்வாறு கூறியதாகவோ அல்லது பரிசுத்த ஆவி அவ்வாறு கூறியதாகவோ அல்லது கர்த்தர் அவ்வாறு கூறியதாகவோ அல்லது ஏதாவது அசரீரி அவ்வாறு கூறியதாகவோ பைபிளிலிருந்து ஒரு வசனத்தையாவது நீங்கள் காண்பிக்க இயலுமா?

அதற்கு முன் நான் உங்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சிந்திப்பதற்கும் எனக்கு விளக்குவதற்கும் பைபிளிலிருந்து ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.


"ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்."


மேலே குறிப்பிட்ட வசனம் இயேசுவை சிலுவையில் அறைந்த பொழுது அதிலிருந்து அவர் செய்த பிரார்த்தனை அல்லது அழைப்பாகும். இது தங்களுக்கு நன்றாக தெரியும் என நினைக்கிறேன். புதிய ஏற்பாட்டில் மத்தேயு 27 ஆவது அதிகாரம் 46 ஆவது வசனமாக மேற்கண்ட வசம் வருகிறது.

நீங்கள் "இயேசு தான் கர்த்தர்" என்பதற்கான ஆதாரத்தை வைக்கும் பொழுது மேற்கண்ட வசனத்தில் "இயேசு அழைத்தது யாரை" என்பதையும் சற்று விவரிக்க கோருகிறேன்.

Monday, June 12, 2006

விடை தெரியா பின்னூட்டங்கள் - 2

நல்லடியாருடைய "யாகாவாராயினும் நாகாக்க" பதிவில் நண்பர் ஜோ அவர்கள் எழுதிய பின்னூட்டத்திற்கு நான் இட்ட பதில் பின்னுட்டம்.


//இஸ்லாத்தில் இருக்கும் சிலருக்கே இஸ்லாம் பற்றி சரியாக தெரிவதில்லை என்று ஒப்புக்கொள்ளும்//

நண்பரே இதத்தான் நா பல எடங்கள்ல மாங்கு மாங்குன்னு கத்திகிட்டு இருக்கேன். இத்த நம்ம தருமி சாரு ஒத்துக்கிட்டாரான்னு மொதல்ல பாருங்க.

பைபிள்ள இருப்பதப் பத்தி ஒரு கேள்வி கேட்டத மரியாதய்க்கு கூட இது வர பிரசுரிக்காத்தவரு, தன்ன மொதல்ல அடயாளப்படுத்துன பைபிள்ள இருப்பதயே முழுமையா தெரியாத்தவரு, தான் மதம் மாறுனதுக்கு தன்னோட மதத்தப்பத்தி தவறான ஒரு காரணத்த கொடுக்கும் போது மத்த மதத்தப் பத்தி எந்த அளவுக்கு இவருக்கு தெரிஞ்சிருக்கும்.

"யாகாவாராயினும் நாகாக்க" என்பதன் அர்த்தம் பேராசிரியரான அவருக்கேத் தெரியாதா என்ன? அத்த நாபகப் படுத்தத் தான் நல்லடியாரு இந்த தலப்ப வச்சாராயிருக்கும். சரியா தான் வச்சிருக்காரு.

இஸ்லாமும் கிறித்துவமும் ஒரு தந்த மதங்கள் என்பத அறிஞ்ச தருமி அய்யா, அதில ஒண்ணுல பெறந்து வளந்தவருக்கு மத்த மதத்துடைய அடிப்படய(ஆதத்தின் மனைவி பெயர் இஸ்லாத்தில் கூறப்படவில்லை என்ற அவரின் கண்டுபிடித்தல்) கூட தெரியவில்லயின்னா அவரு எந்த அளவுக்கு மதத்த ஆராய்ச்சி பண்ணியிருப்பாருன்னு வெளங்குதுல்லியா.

சரி அவரு பேராசிரியரு ஆனதுனால அவருக்கு மரியாத கொடுக்கணுமின்னு நீங்க அவருக்கு வக்காலத்து வாங்கியிருக்கீங்கன்னா நானும் ஒங்க கச்சி தான்.

ஆனா அவருடைய "மதம் மாறுன கதய" விமர்ப்பதின் அடிப்படைல கூறுனா நா நல்லடியாருடைய கச்சி தான்.

ஒண்ண பத்தி ஒரு கருத்து கூறுவதுக்கு முன்னாடி அத்த பத்தி தீர ஆய்ந்து முடியவில்லயின்னா யாரிடமாவது கேட்டு தெரிஞ்சிகிட்டு கருத்து சொல்லுவதல்லவா சிறந்தது. இது கூடவா பேராசிரியரான தருமி சாருக்கு தெரியல.

//அடுத்தவர் அறிந்து கொள்ளும் முகமாக கேட்கும் கேள்விகளில்//

இது ரொம்ப ஓவரா ஒங்களுக்கு தெரியலியா?

நம்ம தருமி சாரு என்ன அறிந்து கொள்ளவா அந்த கேள்விகள கேட்டாரு. மொதல்லயே தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்த பின்னாடி தான் அந்த முடிவுக்கு வரக் காரணம் என்ன அப்பிடீன்னு தானே அவரு காரணங்கள அடுக்கினாரு. அதுல இருக்க தப்ப சுட்டிக்காட்டினா தன்னோட முந்தய முடிவ மறுபரிசீலனைக்கு உட்படுத்தறேன்னு சொல்றது தானே "அறிந்து கொள்ள" கேட்பவருக்கு அழகு. ஆனா அவரு இது வர அப்பிடி ஒரு வார்த்த சொல்லியிருக்காரா?

//முடிந்தால் விளக்கம் கூறி புரிய வைக்க முயலுங்கள்//

இது நல்ல வாசகம் தான். ஆனா நீ எப்படி சொன்னாலும் நா என் முடிவில இருந்து மாறமாட்டேன்னு சொல்லறவகளுக்கு இது சரியாகுமான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

Sunday, June 11, 2006

விடைதெரியா பின்னூட்டங்கள் - 1

தமிழ்மணத்தில் பின்னூட்டங்களை மட்டுறுத்தும் நிபந்தனையைக்
கொண்டு வந்ததால் போலிகளின் ஆபாசத் தாக்குதல்கள் குறைந்ததோ இல்லையோ நியாயமான தங்களது கருத்துக்கு எதிரான கேள்விகளைக் கொண்டு வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது மட்டும் ஜோராக நடக்கிறது. பின்னூட்ட மட்டுறுத்தல் மூலம் பயனடைந்தவர்களில் இப்படிப்பட்டவர்கள் தான் அதிகம்.

"மதம் மாறிய தொடர்" தருமி அவர்களை தமிழ்மணம் அறிந்த தமிழர்கள் அனைவரும் அறிவர். இவர் மதம் மாறியதன் 9(தற்போது 21) காரணங்களில் மிக முக்கியமான காரணமாக அவர் தெரிவித்த "இயேசுவின் சிலுவை மரணம்" குறித்து நான் எழுப்பிய கேள்வியை அவர் அவருடைய பதிவில் குறைந்தபட்சம் அனுமதிக்கக்கூட இல்லை.

தொடர்ந்து அவர் செல்லும் சில இடங்களில் அக்கேள்வியை சார்ந்து நான் வைக்கும் கேள்வியையும் இதுவரை அவர் கண்டு கொண்டதே இல்லை. அங்கும் சில இடங்களில் என் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

எனவே பெரியவர் டோண்டு அவர்களின் பாணியை கடைபிடிக்கலாம் என முடிவெடுத்து முதல் பதிவாக இதனை வைக்கிறேன். இனி எங்கெல்லாம் என் நியாயமான கேள்விகளை வைத்து பின்னூட்டுகிறேனோ அவையெல்லாம் பதிவுகளாக இங்கு தொகுக்கப்படும்.(அவை அங்கு அனுமதிக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படவில்லையெனினும்).

நல்லடியார் அவர்களின் பெண்ணியம் முதல் பதிவில் நான் இவ்வாறு பின்னூட்டியிருந்தேன்.


//முன்னாள் கிறிஸ்தவர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட ஒரு பெண்ணியவாதி//

தருமியைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

சரி தான் எனில், பிழைத்து போகட்டும். விட்டு விடுங்கள்.

அவர் கிறிஸ்தவத்திலிருந்து வெளி வருவதற்கு காரணமாக அடுக்கிய ஒம்போது காரணங்களில் முக்கிய காரணமான "இயேசு சிலுவையில் உயிர் நீத்ததைக்" குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதிலே வரவில்லை. குறைந்த பட்சம் நாகரிகம் கருதி அக்கேள்வியை பிரசுரிக்க கூட இல்லை.

இவர் கிறிஸ்தவத்திலிருந்து வெளிவந்தவர் தானா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.

தெளிவாக சொல்வதெனில் இவர் பைபிளையே ஒழுங்காக படிக்கவில்லை என்பது என் கேள்வியை மறைத்ததிலிருந்தே தெரிகிறது.

அப்படி இருக்கையில் குரானைக் குறித்தும் இஸ்லாத்தைக் குறித்தும் இவருக்கு என்ன தெரிந்திருக்கப் போகிறது.

அது தான் அவருடைய இஸ்லாத்தில் ஏவாளுக்கு பெயரே இல்லை என்ற வெளிப்படுத்தல்.

யார் யாரோ கக்குவதை இவர் வாந்தியெடுப்பது தெளிவாகத் தெரிகிறது. போகட்டும் ச.... விட்டுத்தள்ளுங்கள்.


நல்லடியாரின் பெண்ணியம் இரண்டாவது பதிவில் தமிழ்செல்வன் அவர்களின் பின்னூட்டமும் அதற்கு தருமி அவர்களின் பதிலும்:


"அட தருமி அய்யா. ஆச்சரியமாக இருக்கிறது! நீங்கள் வலைப்பதிவில் இருக்கிறீர்களா? தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதற்கு முந்தைய திரு. நல்லடியார் அவர்களின் "பெண்ணிய" பதிவில் ஏதோ இரண்டு "பகுத்தறிவாள" அரைவேக்காடுகள் உங்களை குறித்து ஏதோ கூறியதாக ஞாபகம். நீங்கள் பதில் கூறுவீர்கள் என எதிர் பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

இதுவரை அதில் உங்கள் மறுமொழியினை காணாததால் கேட்டேன்."

இதற்கு தருமி அவர்களின் பதில்:


"தமிழ்ச்செல்வன்,
உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்பே நீங்கள் சொன்னவர்களின் பின்னூட்டம் பார்த்தேன்.
என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க...என் பதிவுகளை எவ்வளவு முழுமையாகப் படித்து வருகிறார்கள் என்று எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு!! அதோடு நதியைக் கடக்க தன் தோளில் பெண்ணைத் தூக்கிச் சென்ற குருவைப்பார்த்து சீடர்கள் கேட்ட கேள்வியும், குருவின் பதிலும் நினைவுக்கு வந்தன."

இதற்கு நான் வைத்த பதில்,


//தமிழ்ச்செல்வன்,
உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்பே நீங்கள் சொன்னவர்களின் பின்னூட்டம் பார்த்தேன்.
என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க...என் பதிவுகளை எவ்வளவு முழுமையாகப் படித்து வருகிறார்கள் என்று எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக்கு!!//

நழுவல் அருமை.

எப்படி உங்களால் மட்டும் இதற்கு முடிகிறது?

"நான் ஏன் மதம் மாறினேன்" என்று காரணங்களை அடுக்குவீர்கள்.

அவைகளில் பல அபத்தங்கள் உள்ளனவே எனச் சுட்டிக் காட்டி கேள்வி கேட்டால், "ஆகா என் பதிவுகளை முழுமையாக படிக்கிறார்கள்" என புழகாங்கிதமடைந்து யாராலும் வழங்க முடியாத அதியற்புத பதிலைத் தருவீர்கள்.

"மதம் மாறிய" தொடர் பதிவுகளின் காரணமென்ன என இப்பொழுது தெளிவாக விளங்குகிறது.

ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம் நடத்துங்க.


//அதற்காகவே அந்த மதங்களைப் பற்றி என் ஆய்வை கொஞ்சம் விஸ்தாரமாக வைத்தேன்.//

இது "நான் ஏன் மதம் மாறினேன் - 5" -ல் தருமி வைத்தது.

இவருடைய விஸ்தாரமான ஆய்வில் அவர் கண்டு கொண்ட உண்மை,

1. "இஸ்லாத்தில் முதல் மனிதன் ஆதமுடைய மனைவிக்கு பெயர் இல்லை"
2. "கிறிஸ்தவ கடவுள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதாக பைபிளில் வருகிறது"

இதில் முதல் விஷயத்தைக் குறித்து என்ன கூற - சரி இஸ்லாமியரல்லாத அவர் முழுமையாக குரானை ஆய்வு செய்வது சாத்தியமில்லை என விட்டு விடலாம்.

ஆனால் இரண்டாவது விஷயம்!?

பைபிளில் இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக வருகிறதே என கிறிஸ்தவரல்லாத நான் எழுப்பிய கேள்வி இன்னும் தொங்கிக் கொண்டு நிற்கிறது.

அவர் மதம் மாற காரணங்களில் முக்கிய காரணமாக இதனை வேறு படுத்தியுள்ளார். லாஜிக்கே அடிபடுகிறது.

ஒரு கிறிஸ்தவரான அவருக்கே இது தெரியவில்லை எனில் அவருடைய விஸ்தாரமான ஆய்வை குறித்து(தனது வேத புத்தகத்தைக் குறித்தே சரியான பார்வையில்லாத போது) என்ன சொல்ல?

இனி இதற்கு கூட அவரிடமிருந்து ஆழ்ந்த விஸ்தாரமான அபூர்வ பதிலாக, "ஆகா என் பதிவுகளை முழுமையாக படிக்கிறார்கள்" - இதனை எதிர்பார்க்கலாம்.

இவன் என்னடா அவருடைய பதிவில் வைக்க வேண்டிய பின்னூட்டத்தை இங்கு வைக்கிறானே என்றொரு கேள்வி எழலாம்.

நான் இது தொடர்பாக ஏற்கெனவே அவர் பதிவில் வைத்த பின்னூட்டத்தை ஒரு மரியாதைக்கேனும் இதுவரை பிரசுரிக்காத அவருடைய விசால மனதை நம்பி எப்படி அங்கு வைப்பது. அதனால் தான் அவர் புழங்கும் நியாயமான பின்னூட்டங்களை அனுமதிக்கும் இது போன்ற இடங்களில் இதனை பதிப்பித்து போகிறேன்.

இதே பதிவில் இன்னொரு பகுத்தறிவாளன் வைத்த பின்னூட்டத்திற்கு நான் வைத்த பதில். (இது நாங்கு நாட்களாகியும் இதுவரை நல்லடியார் அவர்களால் அனுமதிக்கப்படவில்லை)
//

ஒரு பேச்சுக்கு உங்கள் வீட்டுப் பெண்களில் ஒருவர் இவ்வாறு நடித்திருந்து நீங்கள் போட்டது போல் ஒருவர் பதிவெழுதி அதை நீங்கள் படிக்க நேர்ந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?//

அட அத்துவல்லாம் பெண்கொலத்த குறிப்பிட்டு சொல்லலீங்கோ. அத்த வெறும் விமர்சனமா மட்டும் பாருங்கோ. நொள்ள கண்ணு கொண்டு பாத்தா இப்பிடித் தான் வெவரம் கெட்ட தனமா கேள்வி வரும்.

//பெண்ணியம் குறித்து உரத்த குரல் எழுப்பும் போது தான் முதலில் அதைக் கடைபிடிக்கிறோமா என ஒருமுறை கேட்டுவிட்டு பிறருக்குச் சொல்லலாம்.//

என்னங்க நீங்க. நாம வெளிய பேசறது எல்லாம் நமக்கில்லீங்க. பெண்ணியங்குற பேருல நாம அப்படி கொரலு கொடுத்தா தானே இது போல அவுத்து போட்டு பெண்ணுக பொறத்த வருவாவ. நம்ம வூட்டு பொண்ணுகளுக்கு சமூகத்துல மரியாத கெடக்கணுமுன்னு நாம நெனக்கறது போல மத்த பொண்ணுகளுக்கும் நாம நெனச்சா பின்ன எப்படி தான் இது போல ஜொள்ளு வுடறதாம். எல்லா பொண்ணுகளும் போத்திகிட்டு வந்தா நம்ம அரிப்ப தீத்துகிடூது எப்படியாம். இதுகூட இன்னும் தெரியாம என்னத்த தான் இதுவர நீங்க "பகுத்து" "அறிஞ்சீங்களோ"? அப்பிடிப்பாத்தா நம்ம பெரியவரு டோண்டு சாரு பெண்ணுங்களுக்கு கொடுத்த ஐடியாக்கள மொதல்ல அவரு வீட்டு பொண்ணுங்களுக்கு சொல்ல சொல்லுவீரு போல தோணுதே? அதெல்லாம் நடக்கிற காரியமா?

//'பிறர் கண்ணில் துரும்பு இருப்பதைப் பார்ர்க்குமுன், உன் கண்ணில் கிடக்கும் உத்திரத்தைக் கவனி' என்கிற ஏசுநாதரின் அறவுரை நினைவுக்கு வருகிறது.. //

ஒங்களுக்கு தானே. அவருக்கு இது நாபகத்துக்கு வர சான்ஸ் இல்லீங்க. இப்பிடி ஒன்ன அவரு பைபிளில படிச்சிருந்தா தானே நாபகத்துக்கு வரும்.

"ஏசுநாதர கர்த்தர் காப்பாத்துனதா" பைபிளுல வருதே அப்பிடீன்னு நா மாங்கு மாங்குன்னு கத்திகிட்டிருக்கேன். இதுவர அத்த அவுரு கண்டுகிட்டது போல காட்டுறாரா பாருங்க?
இனி அப்படியே இத்த அவுரு பைபிளுல படிச்சிருந்தாலும் அத்த அவுரு பின்பற்றணுமின்னு அவசியமொண்ணுமில்லீங்க. அவுரு தான் "மதம் மாறி" ரொம்ப நாளாச்சே.

ம்....
செவிடன் காதுல ஊதிய..........

எரும மாட்டு மேல மழ பெஞ்ச......