Monday, June 12, 2006

விடை தெரியா பின்னூட்டங்கள் - 2

நல்லடியாருடைய "யாகாவாராயினும் நாகாக்க" பதிவில் நண்பர் ஜோ அவர்கள் எழுதிய பின்னூட்டத்திற்கு நான் இட்ட பதில் பின்னுட்டம்.


//இஸ்லாத்தில் இருக்கும் சிலருக்கே இஸ்லாம் பற்றி சரியாக தெரிவதில்லை என்று ஒப்புக்கொள்ளும்//

நண்பரே இதத்தான் நா பல எடங்கள்ல மாங்கு மாங்குன்னு கத்திகிட்டு இருக்கேன். இத்த நம்ம தருமி சாரு ஒத்துக்கிட்டாரான்னு மொதல்ல பாருங்க.

பைபிள்ள இருப்பதப் பத்தி ஒரு கேள்வி கேட்டத மரியாதய்க்கு கூட இது வர பிரசுரிக்காத்தவரு, தன்ன மொதல்ல அடயாளப்படுத்துன பைபிள்ள இருப்பதயே முழுமையா தெரியாத்தவரு, தான் மதம் மாறுனதுக்கு தன்னோட மதத்தப்பத்தி தவறான ஒரு காரணத்த கொடுக்கும் போது மத்த மதத்தப் பத்தி எந்த அளவுக்கு இவருக்கு தெரிஞ்சிருக்கும்.

"யாகாவாராயினும் நாகாக்க" என்பதன் அர்த்தம் பேராசிரியரான அவருக்கேத் தெரியாதா என்ன? அத்த நாபகப் படுத்தத் தான் நல்லடியாரு இந்த தலப்ப வச்சாராயிருக்கும். சரியா தான் வச்சிருக்காரு.

இஸ்லாமும் கிறித்துவமும் ஒரு தந்த மதங்கள் என்பத அறிஞ்ச தருமி அய்யா, அதில ஒண்ணுல பெறந்து வளந்தவருக்கு மத்த மதத்துடைய அடிப்படய(ஆதத்தின் மனைவி பெயர் இஸ்லாத்தில் கூறப்படவில்லை என்ற அவரின் கண்டுபிடித்தல்) கூட தெரியவில்லயின்னா அவரு எந்த அளவுக்கு மதத்த ஆராய்ச்சி பண்ணியிருப்பாருன்னு வெளங்குதுல்லியா.

சரி அவரு பேராசிரியரு ஆனதுனால அவருக்கு மரியாத கொடுக்கணுமின்னு நீங்க அவருக்கு வக்காலத்து வாங்கியிருக்கீங்கன்னா நானும் ஒங்க கச்சி தான்.

ஆனா அவருடைய "மதம் மாறுன கதய" விமர்ப்பதின் அடிப்படைல கூறுனா நா நல்லடியாருடைய கச்சி தான்.

ஒண்ண பத்தி ஒரு கருத்து கூறுவதுக்கு முன்னாடி அத்த பத்தி தீர ஆய்ந்து முடியவில்லயின்னா யாரிடமாவது கேட்டு தெரிஞ்சிகிட்டு கருத்து சொல்லுவதல்லவா சிறந்தது. இது கூடவா பேராசிரியரான தருமி சாருக்கு தெரியல.

//அடுத்தவர் அறிந்து கொள்ளும் முகமாக கேட்கும் கேள்விகளில்//

இது ரொம்ப ஓவரா ஒங்களுக்கு தெரியலியா?

நம்ம தருமி சாரு என்ன அறிந்து கொள்ளவா அந்த கேள்விகள கேட்டாரு. மொதல்லயே தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்த பின்னாடி தான் அந்த முடிவுக்கு வரக் காரணம் என்ன அப்பிடீன்னு தானே அவரு காரணங்கள அடுக்கினாரு. அதுல இருக்க தப்ப சுட்டிக்காட்டினா தன்னோட முந்தய முடிவ மறுபரிசீலனைக்கு உட்படுத்தறேன்னு சொல்றது தானே "அறிந்து கொள்ள" கேட்பவருக்கு அழகு. ஆனா அவரு இது வர அப்பிடி ஒரு வார்த்த சொல்லியிருக்காரா?

//முடிந்தால் விளக்கம் கூறி புரிய வைக்க முயலுங்கள்//

இது நல்ல வாசகம் தான். ஆனா நீ எப்படி சொன்னாலும் நா என் முடிவில இருந்து மாறமாட்டேன்னு சொல்லறவகளுக்கு இது சரியாகுமான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

0 comments: