Tuesday, November 15, 2005

முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களாவார்களா?

சமீபத்தில் பைபிளின் ஒரு பிரதி எனக்கு கிடைத்தது. புத்தகங்களை அதிகம் விரும்பிப் படிப்பதால் இதையும் விட வில்லை. இதைப் படிப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

பைபிள் இன்றைய உலகின் மிகப் பெரிய சமுதாயமான கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதாக இருந்தாலும் உலகின் மற்றைய அடுத்த இரு பெரிய சமுதாயங்களான முஸ்லிம் மற்றும் யூதர்களோடும் தொடர்புடையது.(இதில் முஸ்லிம்கள் பைபிளை நம்புகின்றனர். ஆனால் யூதர்கள் பைபிளை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைக் குறித்து மற்றொரு சமயம் பார்க்கலாம்).

உலகின் இம்மூன்று பெரிய சமுதாயங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உண்டு. அவற்றில் சில,

1. உலகிற்கு ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தை கொண்டவை(இந்து மதமும் அடிப்படையில் ஒரே கடவுளைத் தான் கூறுகிறது)

2. மூன்று மதங்களுமே உருவ வழிபாட்டுக்கு எதிரானவை.

3. மூன்று மதங்களுமே உலகின் ஆதி மனிதனாக ஒரே மனிதனையே குறிப்பிடுகின்றன.

4. எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஒற்றுமை இம்மூன்று சமுதாயங்களும் ஒரு மனிதனின்(ஆபிரகாம்) சந்ததியே.

ஒரே தந்தையின் மக்களாகிய இம்மூன்று சமுதாயங்களும் இன்று பிரிந்து கிடப்பது மட்டுமல்லாமல் உலகின் பிரச்சனைகளுக்கும் காரணிகளாக விளங்குகின்றன. ஏன் இவர்கள் பிரிந்துள்ளனர் என்ற கேள்வி மனதில் பலமுறை எழுந்ததுண்டு. நம்பிக்கை அடிப்படையில் சில விஷயங்கள் தெரியுமென்றாலும் அதையே மற்றொரு சமுதாயத்திற்கு எதிராக கூறுவது சரியில்லை என்பதால் அதனைக் குறித்து பிறரிடம் பேசுவதில்லை. ஒரு சமுதாயத்தைக் குறித்து கூடுதல் அறிய அவர்கள் பின்பற்றும் வேதங்களை படிப்பதே சரியான வழி.

இக்காரணங்களாலும் கூடுதல் பைபிளைக் குறித்து அறியும் ஆவலில் படிக்கத் தொடங்கினேன்.
படிக்கப் படிக்க பல ஆச்சரியங்கள், பல சந்தேகங்கள், பல கேள்விகள்(அது தானே நம் பணி).

எனக்கு நண்பர்கள் வட்டம் என்று எடுத்துக் கொண்டால் மீனவர்களும், ஆசாரிகளும் தான் அதிகம். உண்மையில் கிறிஸ்தவ மீனவ நண்பர்களுக்கு பைபிள் என ஒன்று இருப்பதே ஞாயிறுகளில் தான் நினைவுக்கு வரும். அதுவும் பள்ளியில் பாஸ்டர் என்ன படிக்கிறாரோ அதைக் கேட்பதோடு சரி. எனக்கு எழுந்த சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டபொழுது அவர்கள் கூறிய பதில் - "போடேய் ஒனக்கு வேற வேலயில்ல! எவன் இங்க இதெல்லாம் படிக்கான்!". எனக்கு சிரிக்கவா அழவா என்று தெரியவில்லை. இருந்தும் பல வழிகளில் எனக்கு எழுந்த சந்தேகங்களுக்கு விடை காண முயண்றேன். இது வரை கிடைக்கவில்லை. சரி இங்கேயாவது விடை கிடைக்கிறதா பார்ப்போம் என்று எனக்கு எழுந்த கேள்விகளை ஆதாரத்துடன் இங்கு குறிப்பிடுகிறேன். தெரிந்தவர்கள் பதிலிடுங்களேன்.

1. ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்! நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.
2. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
3. அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான்@ தேவன் அவனோடே பேசி:
4. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.
5. இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
6. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்@ உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.
7. உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.
9. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்
11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம்நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்@ வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.
13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் பண்ணவேண்டியது அவசியம்@ இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது.
14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். [ஆதியாகமம் (17:1௧4) ]

23. அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.
24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
25. அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான்.
26. ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
27. வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள
[ஆதியாகமம் (17:23௨7)]


கர்த்தர் ஆபிரகாமிற்கு இடும் ஓர் கட்டளையைக் குறித்து பைபிளின் ஆதியாகமம் 17 ஆவது அத்தியாயம் குறிப்பிடுவதை மேல் வரிகள் தெரிவிக்கின்றன.

அக்கட்டளையை நிறைவேற்றினால் ஆபிரகாமின் சந்ததிகளை பெருகச் செய்வதாகவும், தவறினால் தன் ஜனத்திலிருந்து அறுப்புண்டு போவான் என்றும் இறைக் கட்டளை குறிப்பிடுகிறது.

இவ்விஷயத்தில் இன்று உலகில் முஸ்லிம்களே அக்கட்டளையை கடமையாக வைத்து நிறைவேற்றுகின்றனர் - கேள்விப்பட்டதை வைத்து சில யூதர்களும்.

ஏன் கிறிஸ்தவர்கள் என்று தன்னைக் கூறிக்கொள்பவர்கள் இக்கட்டளையை நிறைவேற்றுவதில்லை?

பைபிளைப் பின்பற்றுவதில் கிறிஸ்தவர்களை விட முஸ்லிம்கள் தானே முன்னணியில் இருக்கின்றனர்?

எனில் முஸ்லிம்கள் தானே உண்மையான கிறிஸ்தவர்கள்?

20 comments:

said...

வாங்க அண்ணாச்சி..நம்மூர் காரரா..வாங்க வாங்க.
//உண்மையில் கிறிஸ்தவ மீனவ நண்பர்களுக்கு பைபிள் என ஒன்று இருப்பதே ஞாயிறுகளில் தான் நினைவுக்கு வரும்.//
அப்படியாண்ணே? எந்த மீனவ ஊருல போய் பாத்தீங்க?
//அதுவும் பள்ளியில் பாஸ்டர் என்ன படிக்கிறாரோ அதைக் கேட்பதோடு சரி.//
குமரி மாவட்ட மீனவர் முழுக்க முழுக்க கத்தோலிக்கர் .அதுல எங்க பாஸ்டர் வந்தாரு ? பாதிரியார் தானே வருவாரு.

//பைபிளைப் பின்பற்றுவதில் கிறிஸ்தவர்களை விட முஸ்லிம்கள் தானே முன்னணியில் இருக்கின்றனர்?

எனில் முஸ்லிம்கள் தானே உண்மையான கிறிஸ்தவர்கள்?//

அண்ணே! நீங்க சொல்லுறதெல்லாம் பைபிளோட பழைய ஏற்பாடு .அது கிட்ட தட்ட யூத,கிறிஸ்தவ,முஸ்லிம் எல்லோருக்கும் பொது தான் ..யூதர்கள் கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் -னு தானே இருந்தாங்க .யூதரான இயேசு அதை மாத்தி "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு" -னு சொல்லலியா ? ஒய்வு நாள் பத்தி யூதர்களோடு அவர் தர்க்கம் பண்ணல்லியா ?

கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் விவிலியத்தின் புதிய ஏற்பாடுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் .கொஞ்சம் அதையும் படியுங்க .இயேசுவே விருத்த சேதனம் செய்தார் ..அப்புறம் கிறிஸ்தவர்கள் ஏன் செய்வதில்லை என்ற கேள்வி எனக்கும் இருக்கு ..ஆனா இயேசு தச்சனா இருந்த மாதிரி ,மீன் பிடிச்ச மாதிரி எல்லோரும் இருக்கணும்னு அவசியம் இல்லயே ? விருத்த சேதனம் செய்வது யூதர்களின் குல வழக்கம் .அதனான் அவருடைய பெற்றோரும் செய்தார்கள் .

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

"அப்படியாண்ணே? எந்த மீனவ ஊருல போய் பாத்தீங்க?"

அண்ணே அது என்னுடைய கிறிஸ்தவ நண்பர்களை வைத்து கூறியது. பதிவை ஒரு முறை கூட திரும்ப படிங்க!

நான் பொய் சொல்லவில்லை என்பதை காட்ட அவர்கள் யார் என்று வேண்டுமானாலும் கூறுகிறேன். எனக்கு தனி மடலிடுங்கள். நாங்கள் எங்களுக்குள் பலமுறை பேசிய விஷயங்களில் ஒன்றைத்தான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.

"எங்க பாஸ்டர் வந்தாரு ? பாதிரியார் தானே வருவாரு"

அது இரண்டும் ஒன்று தான் என நினைத்து எழுதியது. அறியாததை அறிவதற்கு தானே எழுதுகிறேன். ஒரு தகவல் தந்ததற்கு நன்றி தலைவரே!

"கொஞ்சம் அதையும் படியுங்க"

கண்டிப்பா. படித்து விட்டு ஏதாவது கேட்டால் சொல்லித்தர ஆள் இல்லாததால் தான் வேதங்களின் பக்கம் தலை காட்டியதில்லை. சொல்லித் தர நீங்கள் ஒருவராவது தயார் எனில் கண்டிப்பாக படிக்கிறேன்.

"இயேசு தச்சனா இருந்த மாதிரி ,மீன் பிடிச்ச மாதிரி"

இதற்கும் கர்த்தருடைய கட்டளைக்கும் வித்தியாசமில்லையா?

விருத்தசேதனம் கர்த்தரே தன்னுடைய கட்டளையாக அவருக்கும் நமக்கும் இடையில் உள்ள உடன்படிக்கையாக அல்லவா குறிப்பிடுகிறார்!

ஓர் இறைக் கட்டளையை மாற்றுவது எனில் "கண்ணுக்கு கண்" போல இயேசு அதனை கூறியிருக்க மாட்டாரா?

"விருத்த சேதனம் செய்வது யூதர்களின் குல வழக்கம்"

கர்த்தரின் கட்டளையை யூதர்களின் குலவழக்கமாக மாற்றிவிட்டீர்களே!

நண்பரே! நான் இக்கேள்விகளை கேட்டிருப்பது நமக்கிடையில் பிரச்சினையை உருவாக்குவதற்கல்ல. என் கேள்விகள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் தயவு செய்து தாங்கள் பதில் கூற வேண்டாம். நான் சகோதரர்களான நமக்கிடையில் ஏன் குழப்பம் என்பதைக் குறித்து ஆரோக்கியமான ஓர் சர்ச்சையைத் தான் எதிர்ப்பார்க்கிறேன். மேலும் இப்பதிவை தொடங்கியதின் நோக்கமே என் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடை தேடித் தான். நான் இங்கே பொய்யாக ஏதாவது எழுதினால் என்னிடம் சண்டைக்கு வாங்கள்.

"எனக்கென்னவோ "பகுத்தறிவாளர்" இசுலாமியர்களையும் கிறித்தவர்களையும் 'சிண்டு' முடிஞ்சு குளிர்காய கடைவிரித்திருக்கிற மாதிர்தான் தெரியுது. எதுக்கும் காசி ஒரு கண் வைப்பாராக!"

தஞ்சை கண்ணன் அவர்களே, வீணாக ஏன் மற்றவர்களுக்குள் "சிண்டு" முடிகிறீர்கள். பிடிக்க வில்லை எனில் பேசமல் போய்விடுங்களேன். இரண்டு அண்ணன் தம்பிகளுக்கிடையில் தகராறு எனில் அதை பேசித் தீர்த்துக் கொள்வதில்லையா? அதே தான் இதுவும். சண்டையை மறந்து மீண்டும் ஒன்றாக சகோதர மனிதர்களாக வாழ்வதற்கு உள்ள ஒரு சிறு முயற்சி தான் இது.

சகோதரர்கள் தங்கள் சண்டையை பேசித்தீர்த்து ஒன்றாவதை நீங்கள் விரும்பவில்லைய? இருவருக்கிடையில் மூட்டி விடுவதால் உங்களுக்கு என்ன லாபம். தயவு செய்து பிடிக்கவில்லையெனில் பேசாமல் போய் விடுங்களேன்.

said...

பகுத்தறிவாளன்,
உங்களை ஒன்றும் தவறாக நினைக்கவில்லை .உங்களுக்கு மதத்தின் சார்பாக அதிகாரபூர்வமாக பதில் சொல்ல நான் அந்த அளவு மதவாதியும் இல்லை .ஆனால் எனக்கு தெரிந்தவற்றை உங்களுக்கு சொல்லுவதில் ஒன்றும் பிரச்சனையில்லை.

விருத்த சேதனம் கர்த்தரின் பத்துக்கட்டளைகளில் இல்லை.

இறைவன் பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேலர்களோடு பல உடன்படிக்கைகளை செய்திருக்கிறார் என படிக்கிறோம் .எகிப்தியர்களுக்கு எதிராக செங்கடலை மூடியதும் கடவுள் தான் .ஆனால் எகிப்தியருக்கும் அவர் தானே கடவுள்.

விருத்த சேதனம் பற்றி யேசு எதையும் குறிப்பிடவுமில்லை .வலியுறுத்தவும் இல்லை .பொதுவாக இயேசு இத்தகைய சடங்கு முறைகளை வலியுறுதவில்லை.

முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .கடவுளின் பிரதிநிதியாக முகமது அவர்கள் இஸ்லாத்தின் கோட்பாடுகளை நிறுவி அதனை வளர்த்தது போல ,இயேசு எந்த மதத்தையும் நிறுவவில்லை .அவர் கருத்துக்களை மட்டுமே விட்டுச்சென்றார் .கிறிஸ்துவம் அவரின் இறப்புக்கு பின்னால் தோன்றியது .அவரே தோற்றுவித்ததல்ல.

Anonymous said...

//விருத்த சேதனம் கர்த்தரின் பத்துக்கட்டளைகளில் இல்லை.//

**********
7.உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

9. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
***********

தலைமுறை தலைமுறையாக தொடரும் படியான ஓர் உடன்படிக்கையை ஆபிரகாமி(இப்ராகிமி(அலை))டம் ஏற்கெனவே பண்ணிவிட்டார். பின்னர் அதனைக் குறித்து மோசே(மூசா(அலை))க்கு அருளப்பட்ட பத்துகட்டளை(தௌராத்)களிலோ, தாவீதி(தாவூது(அலை))ற்கு அருளப்பட்ட சங்கீதத்திலோ(ஸபூர்), இயேசு(ஈசா(அலை))வின் மூலம் இராஜ்ஜியத்தின் சுவிஸேஷங்களிலோ(பைபிள்) கூறவில்லையெனில் அந்த உடன்படிக்கை நிலை நிற்கிறது என்று தானே அர்த்தம்.

அவ்வுடன்படிக்கை மாற்றப்பட்டது எனில் ஆபிரகாமிற்கு பின் வந்த ஏதாவது ஒரு தீர்க்கதரிசியின் ஊடே இறைவனே அதைக் கூறியிருக்க வேண்டுமல்லவா? "கண்ணுக்கு கண்" சட்டம் இயேசு(ஈசா(அலை))வின் மூலம் மாற்றப் பட்டதைப் போல்.

இறைவனே நேரடியாக ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையில் இவ்வளவு கவனக்குறைவுடன் இருப்பது சரியா?

Anonymous said...

Good Post! very Intresting. Please continue to post more like this.

said...

நல்லக் கருத்து தான். ஆனால் இங்கே நான் யாருடைய அப்பனை சரியில்லை என்று கூறினேன். அதைவிட மூன்று சகோதரர் என்று கூறிவிட்டு மூன்று பேருக்கும் அப்பன் வேறு வேறு என்று நீங்கள் அல்லவா கூறுகிறீர்கள்.

மூன்று சகோதரர்களுக்கும் ஒரே அப்பன் தான் என்றும் அப்பன் சொல்வதை இவர்கள் ஒழுங்காக கேட்டு நடப்பதில்லை என்றல்லவோ நான் கூறியிருக்கிறேன். வேண்டுமானால் நீங்கள் ஒரு முறை கூட பதிவை படித்துப் பாருங்களேன்.

said...

"உண்மையாகச் சொன்னால் மூன்று சகோதரர்கள் வெவ்வேறு நம்பிக்கை கொண்டு பிரிந்துள்ளார்கள். இவர்களுக்குள் சமாதானம் செய்து வைப்பவர் அவர்களின் நல்ல பக்கங்களை எடுத்துச் சொன்னால் நிச்சயம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உன் அப்பனும் சரி இல்லை. அவன் அப்பனும் சரி இல்லை என்றால் சமாதானமாகுமா?"

நல்லக் கருத்து தான். ஆனால் இங்கே நான் யாருடைய அப்பனை சரியில்லை என்று கூறினேன். அதைவிட மூன்று சகோதரர் என்று கூறிவிட்டு மூன்று பேருக்கும் அப்பன் வேறு வேறு என்று நீங்கள் அல்லவா கூறுகிறீர்கள்.

மூன்று சகோதரர்களுக்கும் ஒரே அப்பன் தான் என்றும் அப்பன் சொல்வதை இவர்கள் ஒழுங்காக கேட்டு நடப்பதில்லை என்றல்லவோ நான் கூறியிருக்கிறேன். வேண்டுமானால் நீங்கள் ஒரு முறை கூட பதிவை படித்துப் பாருங்களேன்.

said...

8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.//

- எனக்கு இன்னொரு சந்தேகம்: ஆபிரஹாமின் அந்தக்கடவுள் அந்தக்கானான் தேசத்துக்காரர்களுக்கு மட்டும்தானே தான் கடவுளாக இருப்பதாக அவரே சொல்லியுள்ளார்.

- இந்த சந்தேகத்தைத்தான் இந்தப் பதிவில் 9-வது பாயிண்டாக வைத்துள்ளேன். கொஞ்சம் அதையும் பாருங்களேன்.

Anonymous said...

'விருத்த சேதனம்'-ன்னா இன்னாங்கோ?

said...

****
/(இந்து மதமும் அடிப்படையில் ஒரே கடவுளைத் தான் கூறுகிறது)/

மெய்யாலுமா? ஆதாரம் பிளீஸ்
****

புலியண்ணே! அடுத்த கேள்வி(பதிவு)யே அதைப்பற்றித் தான் சற்று பொறுத்திருங்களேன்!

Anonymous said...

முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அல்லர். அவர்கள் முதன்முதலில் இந்துக்களாக இருந்தவர்கள். அதுவும் குறிப்பாக பிராமனர்களாக இருந்தவர்கள். படிப்படியாக அவர்களுக்குள் பிரிவினைகள் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நாளடைவில் முஸ்லிம்களாக மாறினார்கள். இதுகுறித்து சமீபத்தில் 1945ல் பீட்டர்சன் என்பவர் எழுதிய இந்த உரலைப் பார்க்கவும்.

http://www.pcug.org.au/~mcdialog/events.html

said...

""கண்ணுக்கு கண்" சட்டம் இயேசு(ஈசா(அலை))வின் மூலம் மாற்றப் பட்டதைப் போல்." //- அப்போ, அங்கேயும் amendment, revision,deletion -எல்லாமே உண்டு போலும்!!

said...

பைபிளை முழுவதும் படித்தவன், 95% நாத்திகன் என்ற தகுதியுடன் நான் இதற்குக் கருத்து சொல்ல தகுதியானவன் என்று நினைக்கிறேன்.

"பகுத்தறிவாளன்" - இது நீங்களே வைத்துக் கொண்ட பெயர்தானே??

பைபிள் என்பது, ஆதியாகமம் முதல் திருவெளிப்பாடு வரை சுமார் 130 அதிகாரங்களைக் கொண்டது. சும்மா, ஆதியாகமத்தில் 15ம் அதிகாரம்வாக்கில் வரும், ஆபிரகாமை வைத்துக் கொண்டு மீதி உள்ள 1500 பக்கங்களைக் கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதில்லை என்று பகுத்தறிந்து சொல்லி இருப்பது நல்லதொரு விளம்பர யுக்தி.(நிலவைப் பார்த்துவிட்டு நட்சத்திரங்களை எண்ணிவிட்டேன் என்பான் பொடியன்)

இந்திய விடுதலை பற்றி சொல்லும்போது ஏன் பகதூஷாவில் இருந்து ஆரம்பிக்கிறோம் என்று தெரியுமா? சும்மா விடுதலை கிடைத்தது என்று சொன்னால், சந்ததிகள் அவ்வளவுதானா என்று சுப்புகொட்டிவிட்டு போய்விடுவார்கள். அதனால்தான் அடிமையாய் இருந்த காலம்முதல் ஆரம்பிக்கிறோம், ஒரு முன்னுரை போல.

அதேபோல, புதிய ஏற்பாட்டிற்கு ஒரு முன்னுரைதான் பழைய ஏற்பாடு. என்ன கொஞ்சம் பெரிசு! இயேசு பற்றிய புதிய ஏற்பாடு கதை மட்டும் படித்தால், சந்ததிகள் அவரைப் பைத்தியக்காரன் என்று சொல்லியிருக்கும், வரலாறு தெரியாமல்! பழைய ஏற்பாட்டின்படி, ஜெஹோவா என்ற கடவுள்தான் உலகைப் படைத்து, ஆபிரகாமுடன் பின்னாளில் உடன்படிக்கை செய்வார். (இவர் கிட்டத்தட்ட பகதூஷா மாதிரி, ஒரு ஆரம்பம்தான்) ஆனால் பிற்பாடு தாவீது வருவார்.(இவர் மங்கல் பாண்டே மாதிரி, ஒரு திருப்பம்)

ஆனால், இந்த வழி சரியில்லை அஹிம்சை தேவை என்று புதுவழி சொன்னவர்தான் இயேசு. (இவர் காந்தி போல, நல்ல ஒரு வழிகாட்டி) எனவே இவரது போதனை என்பது புதிய ஏற்பாடு மட்டும்தான். பழைய ஏற்பாட்டைத் திருத்த வந்தவர் இவர். திரும்ப பழைய ஏற்பாடு சொல்றதக் கேளுன்னா பகுத்தறிவா அது?

இதே மனநிலையில்தான் புத்தன், இயேசு, காந்தி, ஹிட்லர் இன்னும் பலர் தவறாக நினைக்கப்படுகின்றனர். ஆனால், மெய்ப்பொருள் காண்பதே பகுத்தறிவு!

இயேசுவை மதமாகப் பார்ப்பவர்கள், கிறிஸ்தவர்கள்; மார்க்கமாகப் பார்ப்பவர்கள்-காந்தி, மற்றும் பலர்.

சுருக்கமாக்ச் சொன்னால், இந்து- சீக்கியம் வித்தியாசம்தான், யூதம்- கிறிஸ்தவம் வித்தியாசம்.

/(இந்து மதமும் அடிப்படையில் ஒரே கடவுளைத் தான் கூறுகிறது)/
அப்படியா? இந்தப் பதிவு போட்டால், கண்டிப்பாக எனக்கு சொல்லி அனுப்புங்கள். சில கேள்விகள் உங்கள் பகுத்தறிவிற்கு?

-ஞானசேகர்

said...

"முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அல்லர். அவர்கள் முதன்முதலில் இந்துக்களாக இருந்தவர்கள். அதுவும் குறிப்பாக பிராமனர்களாக இருந்தவர்கள்."

உளறல். மேலே கூறியதை நான் எழுதவில்லை. போலி டோண்டு அதர் ஆப்ஷனை உபயோகித்து என் பெயரில் பின்னூட்டமிட்டுள்ளான். இது உங்கள் தகவலுக்கு மட்டுமே. மற்றப்படி இந்த இழையில் எழுத எனக்கு விஷயம் இல்லை.

இப்பின்னூட்டம் என்னுடைய http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html பதிவிலும் நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.//

எனக்கு இன்னொரு சந்தேகம்: ஆபிரஹாமின் அந்தக்கடவுள் அந்தக்கானான் தேசத்துக்காரர்களுக்கு மட்டும்தானே தான் கடவுளாக இருப்பதாக அவரே சொல்லியுள்ளார்.//

8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

இதில் எங்கே அவர்களுக்கு "மட்டும்" கடவுளாக இருப்பதாக கூறியிருக்கிறார்? அவரவர்களுக்கு அவசியப் படும் விதத்தில் மற்றிக் கூறுவது இறை வசனங்களாகவே ஆக முடியாது என்பது என் கருத்து.

உங்கள் "9" ஆவது கேள்வியையும் படித்தேன். உங்கள் அளவுக்கு அனுபவ ஞானம் இல்லையெனினும் நீங்கள் கூற வருவது அபத்தமாகப் படுகிறது. எப்படி என்று விளக்க எனக்கு இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது. (என்ன தான் இருந்தாலும் 15 வருட அனுபவத்தின் பக்கம் வராதல்லவா?).

நான் அறிந்த ஒரு சில விஷயங்கள் உங்கள் "9" ஆவது கேள்விக்கு எதிராக உள்ளது. அதில் ஒன்றைக் கேட்கிறேன். விளக்குவீர்களா?

இஸ்லாமிய நம்பிக்கையில் உலகிலுள்ள எல்லா பகுதிகளுக்கும், எல்லா சமுதாயத்தவர்களுக்கும் தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளதாக இருக்கும் போது நீங்கள் ஆபிரகாமிய மதங்கள் அரபு பகுதிகளையே சுற்றிவருவதாக கூறுவது எப்படி சரியாகும்?

இந்த ரீதியில் மேலும் சில சந்தேகங்களும் கேள்விகளும் உண்டு.

எனக்கென்னமோ அதனை வைத்து தனி பதிவிட்டால் என்ன என்று தோன்றுகிறது.(கூடுதல் பதிவுகள் இட்டதாக பீத்திக்கலாமே. அதற்காகத் தான்)

பார்க்கலாம். உங்கள் எல்லாக் கேள்விகளையும் படித்துவிட்டு.... கேள்வி கேட்க வந்த இடத்தில் உங்கள் தயவால் மேலும் பல கேள்விகளை அறிந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கிறதா என்று. வீணாக எதற்கு கேள்விகளை பின்னூட்டமிட்டு வீணடிக்க வேண்டும். கேள்விகள் கேட்பதற்கென்றே தொடங்கிய பதிவல்லவா இது?

said...

நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.// சரி, கேள்வியைச் சிறிது மாற்றிக்கொள்ளட்டுமா? இதில் அவர்களுக்கு கடவுளாக இருப்பதாகத்தானே கூறியிருக்கிறார்?

"எனக்கு இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது. (என்ன தான் இருந்தாலும் 15 வருட அனுபவத்தின் பக்கம் வராதல்லவா?)."//நல்லது. இன்னும் படிக்க வேண்டியதுள்ளதே; ஆனால் அதற்குள் இப்படிச் சொல்வது அபத்தமல்லவா?
"நீங்கள் கூற வருவது அபத்தமாகப் படுகிறது"

"உலகிலுள்ள எல்லா பகுதிகளுக்கும், எல்லா சமுதாயத்தவர்களுக்கும் தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளதாக இருக்கும் போது "//யார் யார் அவர்கள். அஹமதியாக்கள் சொல்வது மாதிரி அரீஸ்டாட்டிலில் இருந்து ஆரம்பிக்கணுமா?அதற்குச் சான்றுகள் என்ன?

"எனக்கென்னமோ அதனை வைத்து தனி பதிவிட்டால் என்ன என்று தோன்றுகிறது.கூடுதல் பதிவுகள் இட்டதாக பீத்திக்கலாமே. அதற்காகத் தான்)" //பீத்திக்கலாமே!

உங்கள் கடைசி பாரா என் அறிவுக்குப் புரியவில்லை... அதோடு, உங்கள் பகுத்தறிவின் நிலைப்பாடு இந்த உங்கள் வரிகளை - "இஸ்லாம் பர்தாவின் மூலம் பெண்களை அடிமையாக்கி வைத்துள்ளது என்ற அறிவிலிகளின் பிரச்சாரத்தை .." - படித்தபிறகே தெரிந்தது.

பெயரை வைத்து தவறாக சில கேள்விகள் இங்கே வைத்து விட்டேன். நன்றி..வணக்கம்.

said...

"பழைய ஏற்பாட்டைத் திருத்த வந்தவர் இவர்."

எனில் ஏற்கெனவே கர்த்தர் "காலம் காலமாக கைக்கொள்ளும் படியான உடன்படிக்கை" என்று கூறி இட்ட கட்டளையையும் மாற்றீ விட்டார் என்கிறீர்களா?

"ஹிட்லர் இன்னும் பலர் தவறாக நினைக்கப்படுகின்றனர்"

லட்சகணக்கான யூதர்களை கொன்று குவித்தது மட்டுமன்றி, ஜப்பான் மீது அணு குண்டு வீசி அங்கும் லட்சகணக்கான மக்களை சாகடிக்க வைக்க காரணமான இரண்டாம் உலக யுத்தம் நடப்பதற்கு காரணமான "ஹிட்லர்" பலரால் தவறாக நினைக்கப் படுவது தவறு தான்!(??!)

தருமி அவர்களுக்கு over to அடுத்த பதிவுகள்!

said...

//எனில் ஏற்கெனவே கர்த்தர் "காலம் காலமாக கைக்கொள்ளும் படியான உடன்படிக்கை" என்று கூறி இட்ட கட்டளையையும் மாற்றீ விட்டார் என்கிறீர்களா?//

ஒரு புத்தகத்தை மறுபதிப்பு செய்வது, புத்தகத்தை மெருகேற்றவே அன்றி, அப்புத்தகத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை.

ஜப்பான் அணுகுண்டுக்கும், ஹிட்லருக்கும் என்ன சம்மந்தம்? நல்லதங்காள், அசோகர், கண்ணகி, புஷ் இவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்றால், ஹிட்லர் உத்தமரே!

"ஈவா பிரான் இளமையிலேயே கிடைத்திருந்தால், ஹிட்லரை இன்றைய உலகம் சிறந்த ஓவியன் என்று போற்றிக்கொண்டு இருக்கும்."

"ஹிட்லர் பதவியேற்ற ஐந்து ஆண்டுகளில் இறந்துபோய் இருந்தால், இன்றைய உலகின் அனைத்துப் பாடத்திடங்களிலும், சிறந்த ஆட்சியாளர் என்று ஹிட்லர் போற்றப்பட்டு இருப்பார்".

-ஞானசேகர்

said...

//கிறிஸ்டியன்ஸோட புதியை ஏற்பாட்டை எழுதியவர் ஏசு அல்ல,சீடர்கள்தான். யாராவது கிறிஸ்டியன் இன்னொரு பைபிளை எழுதினால் அதையும் கிறிஸ்டியன் ஏற்றுக் கொல்வார்களா?

பழைய ஏற்பாடுதான் உண்மையான பைபிள். கிறிஸ்டியன்களே சிந்திங்கய்யா//

அப்ப பழைய ஏற்பாட்டை மட்டும் என்ன இயேசுவா எழுதினார்?

ஒரு மதத்தின் புனிதநூலை, தோற்றுவித்தவரின் சீடர்கள் (மத்தேயு, லூக்கா, மாற்கு, யோவான் மற்றும் பவுல்) எழுதி இருந்தால்கூட, ஏற்கக்கூடாதென்றால் உலகில் எந்த மதமும் கிடையாது.

//கிறிஸ்டியன்களே சிந்திங்கய்யா// இதுபோன்ற வரிகள் நான் சொல்வதில்லை. ஏனெனில், இவர்களுக்கே இப்படி என்றால் மற்றவர்களுக்கு?

-ஞானசேகர்